You can get your Visitor Pass online for MFOI-2024.
Showcase your products to thousands of Millionaire Farmers. Stall Booking is open for MFOI-2024
You can get your Visitor Pass online for MFOI-2024.
சமூகத்தில் ஏதோவொன்றில் ‘The Richest’ என்கிற இடத்தினை பெறுபவருக்கு தனி மரியாதை உண்டு. உண்மையில், ஒட்டுமொத்த ஊடகங்களும் அனைத்துறை சாதனையாளர்களையும் கொண்டாடுகிறதா? என்றால் இல்லை என்பது தான் நிதர்சனம்- பெரும்பான்மையான ஊடகங்களின் கவனமானது வணிகம், விளையாட்டு, பொழுதுபோக்கு என செல்லும் நிலையில் ‘The Richest’ என்கிற இடத்திற்கு விவசாயிகள் தகுதியானவர்களா? என கற்பனை கூட செய்தது இல்லை. நாங்கள் சொல்வது சரிதானே? இனி அந்த கேள்விக்கு இடமில்லை!
இந்தியாவின் விவசாயம் மற்றும் விவசாயத் துறையில் புதுமையான முயற்சிகளை முன்னெடுத்து வரும் க்ரிஷி ஜாக்ரன், 2023-ஆம் ஆண்டில் RFOI – ‘Richest’ Farmers Of India Awards உடன் உங்களை சந்திக்க இருக்கிறது. விவசாயிகளின் வெற்றிக்கதைகள் இங்கிருந்து துவங்க உள்ளது. இந்த விருதானது விவசாயிகளின் வருமானம், அவர்களின் பங்களிப்பில் கிராமங்களின் வளர்ச்சி நிலை, தொழில்நுட்பம் மற்றும் புதுமையான விவசாய முறையில் மகசூலைப் பெருக்குவது என்பதே உள்ளடக்கியது.
இந்த விருது வழங்குதல் நிகழ்வு- உலகத்தின் பழமையான தொழிலான விவசாயத்தில் அடுத்த தலைமுறையினர் அதீத ஆர்வத்துடன் ஈடுபட உந்து சக்தியாக விளங்கும் என நம்பிக்கை கொள்கிறோம்.
MFOI விருது வழங்கும் நோக்கத்தின் மூளையாக விளங்கும் க்ரிஷி ஜாக்ரன் ஊடகத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை ஆசிரியருமான எம்.சி. டொமினிக், நாட்டிற்கு உணவளிக்கும் அந்த ‘கௌரவமான கரங்களை’அங்கீகரிக்கும் வகையில் கிரிஷி ஜாக்ரன், இந்தியா முழுவதிலுமிருந்து, டிசம்பர் 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில், டெல்லியின் அனைவரையும் கௌரவிக்கும் வகையில் வெகுமதி அளிக்க உள்ளார்.
இந்த நிகழ்வில் ஒன்றிய அமைச்சர்கள் முதல் முன்னணி தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்று, இந்தாண்டிற்கான இந்தியாவின் மில்லியனர் விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் ஒரு நிகழ்வாக இது இருக்கும். இந்திய வரலாற்றில் இதுவரை நடக்காத விவசாயிகளை கொண்டாடும் நிகழ்வு, இந்த ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் டிசம்பர் 6, 8 மற்றும் 8, 2023 அன்று நடக்கும் எனப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
MFOI ’23 மூலம் இந்தியாவின் விவசாயத் துறை வரலாற்றில் விவசாயிகளை பிராண்டாக கொண்டாடுவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்!